UA-201587855-1 Tamil369news ஆசய கபட சமபயனஷப: 8-வத மறயக படடம வனறத இநதய அண

ஆசய கபட சமபயனஷப: 8-வத மறயக படடம வனறத இநதய அண

புசான்: ஆடவருக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், ஈரான், சீன தைபே, ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் கொரியா, ஜப்பான், ஈரான்,சீன தைபே, ஹாங் காங் ஆகிய 5 அணிகளையும் வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பவன் ஷேராவத் 10 புள்ளிகள் குவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை