UA-201587855-1 Tamil369news சென்னையில் அக்.8-ம் தேதி சைக்கிள் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் அக்.8-ம் தேதி சைக்கிள் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சைக்கிளிங் போட்டியினை வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவர், பேசியதாவது:

ஹெச்சிஎல் சைக்கிளிங் பந்தயம் வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறும். இந்த போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். முதல் வகை தொழில்முறை வகையை சார்ந்தது. 55 கிலோ மீட்டர் கொண்ட இந்த பந்தயத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அடுத்து அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலைப் பந்தயம் எனப்படும் மற்றொரு வகை உள்ளது. இது 25 கிலோ மீட்டர் பயணமாக இருக்கும். பொதுமக்கள் மற்றும் சைக்கிள்ஓட்டும் ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் 15 கிலோ மீட்டர் பந்தயமும் இடம் பெறுகிறது. இந்த சைக்கிள் பந்தயத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை