UA-201587855-1 Tamil369news கோப்பை இல்லை என்றாலும், சிஎஸ்கேவுக்கு அடுத்து ஆர்சிபிதான் - ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம்

கோப்பை இல்லை என்றாலும், சிஎஸ்கேவுக்கு அடுத்து ஆர்சிபிதான் - ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம்

மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல்-லின் (IPL) தனித்த பிராண்ட் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2022-ல் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் ஒரே வருடத்தில் 80% மதிப்பு அதிகரித்தன் காரணமாக இந்த நிலையை எட்டியுள்ளது.

அதேபோல், ஐ.பி.எல் அணிகளின் வணிக மதிப்பு (Enterprise Valuation) 15.4 பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. 2022ல் இது 8.5 பில்லியன் டாலர் என்று இருந்தது. 2023-2027 ஆண்டுக்கான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமை அதிக தொகைக்கு போனதன் காரணமாக இந்த மதிப்பை ஐபிஎல் எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, புகழ்பெற்ற பார்முலா ஒன் நிறுவனத்தின் மதிப்பைவிட (17.1 பில்லியன் அமெரிக்க டாலர்) ஐ.பி.எல் நிறுவனத்தின் மதிப்பு சற்றே குறைவுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை