UA-201587855-1 Tamil369news இநதயவல நடபறம உலகக கபபயல பஙகறக தகத பறறத இலஙக!

இநதயவல நடபறம உலகக கபபயல பஙகறக தகத பறறத இலஙக!

புலவாயோ: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று தொடரின் சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இலங்கை அணி. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது இலங்கை.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இருந்து முதல் அணியாக இலங்கை தகுதி பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை