UA-201587855-1 Tamil369news ‘மகனின் வெற்றியால் ஆனந்த கண்ணீர்’ - சமூக வலைதளங்களில் வைரலான பிரக்ஞானந்தா தாயின் புகைப்படங்கள்

‘மகனின் வெற்றியால் ஆனந்த கண்ணீர்’ - சமூக வலைதளங்களில் வைரலான பிரக்ஞானந்தா தாயின் புகைப்படங்கள்

சென்னை: ஃபிடேவின் உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை 5-4 என்ற கணக்கில் சடன்டெத் டை பிரேக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா கடும் பின்னடைவை சந்தித்திருந்தார். ஆனால் சில அசாத்தியமான நகர்வுகளை மேற்கொண்டு ஆட்டத்தை டை பிரேக்கர் வரை கொண்டு சென்று வெற்றியை வசப்படுத்தினார். உலகக் கோப்பை செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகுஅரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 17 வயதான பிரக்ஞானந்தா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை