UA-201587855-1 Tamil369news உலகக் கோப்பை நினைவுகள் | 2003-ல் இறுதியில் வீழ்ந்த இந்திய அணி

உலகக் கோப்பை நினைவுகள் | 2003-ல் இறுதியில் வீழ்ந்த இந்திய அணி

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் 14 அணிகள் கலந்துகொண்டன. நெதர்லாந்து, கனடா அணிகள் மீண்டும் களமிறங்கின. நமீபியா அறிமுக அணியாக இடம் பெற்றது. 14 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 3 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 6-ல் மோதின. இங்கிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. அதில் இருந்து இரு அணிகள் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்தின.

இந்த தொடரில் முன்னணி அணிகளான தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதியை தவறாகப் புரிந்து கொண்டதால் தென்னாப்பிரிக்கா ஒரு ரன்னை கூடுதலாக எடுக்க முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. அதேவேளையில்இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே சென்று விளையாட மறுத்தது. இதனால் அந்த அணி லீக் சுற்றுடன் நடையை கட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை