UA-201587855-1 Tamil369news இன்று 3-வது ஒருநாள் போட்டி: சாதனை படைக்குமா இந்திய அணி?

இன்று 3-வது ஒருநாள் போட்டி: சாதனை படைக்குமா இந்திய அணி?

ராஜ்கோட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முதன்முறையாக முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைக்கும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்தூரில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று ராஜ்கோட்டில் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை