UA-201587855-1 Tamil369news ஆட்ட நாயகன் விருதுக்கு கிடைத்த ரூ.4.15 லட்சத்தை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார் சிராஜ்

ஆட்ட நாயகன் விருதுக்கு கிடைத்த ரூ.4.15 லட்சத்தை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார் சிராஜ்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருக்கு வழங்கப்பட்ட ரூ.4.15 லட்சம் பரிசுத் தொகையை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

“இந்த ரொக்கப் பரிசு மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதற்கு முழு தகுதியானவர்கள். ஏனெனில் அவர்கள் இல்லாமல் இந்த தொடர் நடந்திருக்காது” என சிராஜ் தெரிவித்தார். 7 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டை அவர் இந்தப் போட்டியில் கைப்பற்றி இருந்தார். இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட்டாக சிராஜின் அபார பந்துவீச்சு பிரதான காரணம். இதே போல ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் சார்பில் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு ரூ.41.54 லட்சம் வழங்கப்பட்டது. இதனை ஜெய் ஷா அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை