UA-201587855-1 Tamil369news 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா: சிராஜ் அசத்தல் பந்துவீச்சு

8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா: சிராஜ் அசத்தல் பந்துவீச்சு

கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மொகமது சிராஜ் உதவினார்.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை, பாகிஸ்தானில் நடைபெற்றது. லீக் போட்டிகள் பாகிஸ்தான், இலங்கையிலும், சூப்பர்-4 சுற்றுப்போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன. இறுதிச்சுற்றுக்கு இந்தியா, இலங்கை அணிகள் தகுதி பெற்ற நிலையில் இறுதிச் சுற்று ஆட்டம் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தாமதமானது. இதைதொடர்ந்து, 3.40-க்கு ஆட்டம் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை