UA-201587855-1 Tamil369news ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது அதற்குள் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம்: ரிஷப் பண்ட் ஆட்டம் பற்றி கில்கிறிஸ்ட்

ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது அதற்குள் இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம்: ரிஷப் பண்ட் ஆட்டம் பற்றி கில்கிறிஸ்ட்

இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் தன் சொந்த மண்ணில் தன் மக்கள் முன்னிலையில் ஆட முடியாமல் போனது நிச்சயம் ரிஷப் பண்ட்டிற்கு வேதனையையே ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள் வந்து ஆறு ஆண்டுகள் இருக்கும் அதற்குள் அணிக்குள் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் அவர் என்று விதந்தோதுகிறார் ஆஸ்திரேலிய கீப்பர்/பேட்டர் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட்.

ரிஷப் பண்ட் தனது 25-வது வயதில் 2017-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் எதிரணிகளை அச்சுறுத்தும் ஒரு விக்கெட் கீப்பர்/பேட்டராக உருவெடுத்தார். இந்திய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் என்று இவரைத்தான் கூற முடியும் என்னும் அளவுக்கு புகழேணியில் விறுவிறுவென ஏறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை