UA-201587855-1 Tamil369news ஜெய் ஸ்ரீராம் முழக்கம் | சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் வாரியம் புகார்

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் | சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் வாரியம் புகார்

பெங்களூரு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை குறிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என ரசிகர்கள் முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்த சூழலில் இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ரிஸ்வானை நோக்கி எழுப்பப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை