UA-201587855-1 Tamil369news தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற அந்தஅணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடமும் வீழ்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை