UA-201587855-1 Tamil369news ‘3 அணிகள், 3 போட்டி, ஒரு இடம்’: அரை இறுதியில் இந்தியாவுடன் மோதுவது யார்?

‘3 அணிகள், 3 போட்டி, ஒரு இடம்’: அரை இறுதியில் இந்தியாவுடன் மோதுவது யார்?

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கெனவேஅரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது 3-வது அணியாக ஆஸ்திரேலியாவும் நுழைந்துள்ளது. 14 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும். தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளதென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு தலா ஒரு லீக் ஆட்டம் எஞ்சியுள்ளது.

போட்டி அட்டவணையின் படி லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி 4-வது இடத்தை பிடிக்கும் அணியை அரை இறுதி சுற்றில் எதிர்கொள்ளும். மற்றொரு அரை இறுதியில் லீக் சுற்றில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தும். இந்த வகையில் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கடைசியாக அரை இறுதி சுற்றுக்குள் நுழையும் அணியால் இந்த இரு அணிகளின் புள்ளிகளை நெருங்க முடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை