UA-201587855-1 Tamil369news பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

ஹைதராபாத்: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 வெற்றியாளர் பல்லவி பிரசாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்னராக அறிவிக்கப்பட்ட அமர்தீப் சவுத்ரியின் காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில் இன்ஸ்டா பிரபலம் பல்லவி பிரசாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.35 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நடிகர் அமர்தீப் சவுத்ரி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை