UA-201587855-1 Tamil369news SA vs IND 2-வது ODI | தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: ரஜத் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் களமிறங்க வாய்ப்பு

SA vs IND 2-வது ODI | தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: ரஜத் பட்டிதார் அல்லது ரிங்கு சிங் களமிறங்க வாய்ப்பு

கெபெர்ஹா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுமாலை 4.30 மணிக்கு கெபெர்ஹாவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என தன்வசப்படுத்தும். ஸ்ரேயஸ் ஐயர், டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங்அல்லது ரஜத் பட்டிதாருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது வேகத்தில் தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் சுருண்டிருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் 5 விக்கெட்களையும், அவேஷ்கான் 4 விக்கெட்களையும் வேட்டையாடி அசத்தியிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை