UA-201587855-1 Tamil369news ‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ - ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ - ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

நடப்பு ரஞ்சி கோப்பை சீசனின் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களில் தோல்வியை தழுவியது ஆந்திரா. இந்நிலையில், இந்த அறிவிப்பை விஹாரி அறிவித்துள்ளார். நடப்பு சீசனுக்கான ஆந்திர அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருந்தும் முதல் போட்டிக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை