UA-201587855-1 Tamil369news ராஞ்சி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ராஞ்சி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ள 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

ராஞ்சியில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களும், இந்தியா 307 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 60, ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை