UA-201587855-1 Tamil369news காஷ்மீர் | மக்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய சச்சின்!

காஷ்மீர் | மக்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய சச்சின்!

குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார்.

காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் சென்றுள்ளார். தனது பயணம் குறித்த அப்டேட்டை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் குல்மார்க் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். காரில் இருந்து இறங்கிய அவர், ‘நானும் விளையாட வருகிறேன்’ என சொல்லி மக்களுடன் இணைந்து கொண்டார். அதில் பல்வேறு ஷாட்களை ஆடிய சச்சின், கடைசி பந்தினை எதிர்கொண்ட போது பேட்டை தலைகீழாக பிடித்து ஆடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை