UA-201587855-1 Tamil369news உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ.க்கு இர்பான் பதான் கேள்வி

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ.க்கு இர்பான் பதான் கேள்வி

மும்பை: “இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மையில் வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் இடம்பெறவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்த காரணத்தால் அவர்களது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனை பலரும் வரவேற்றனர். அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை