UA-201587855-1 Tamil369news “விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” - விமர்சனங்களுக்கு இயக்குநர் அமீர் விளக்கம்

“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” - விமர்சனங்களுக்கு இயக்குநர் அமீர் விளக்கம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார். மேலும் அவரையும், அவரது கூட்டாளிகளையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை