UA-201587855-1 Tamil369news ‘நான் களத்துக்கு திரும்புவது அறிமுக வீரரை போன்ற உணர்வை தருகிறது’ - ரிஷப் பந்த்

‘நான் களத்துக்கு திரும்புவது அறிமுக வீரரை போன்ற உணர்வை தருகிறது’ - ரிஷப் பந்த்

விசாகப்பட்டினம்: சுமார் 15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டில் களத்துக்கு திரும்பியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இந்நிலையில், இந்த நேரத்தில் தானொரு அறிமுக வீரரை போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை