UA-201587855-1 Tamil369news முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவிப்பு: ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவிப்பு: ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர், ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கார் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை