UA-201587855-1 Tamil369news ‘ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்’ - ஹர்திக் பாண்டியா

‘ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்’ - ஹர்திக் பாண்டியா

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் 31 ரன்களில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. தோல்விக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.

“டாஸ் வென்ற போது 277 ரன்களை ஹைதராபாத் எடுக்கும் என நினைக்கவில்லை. எங்கள் அணி சார்பில் எப்படி பந்துவீசினோம் என சொல்வதை காட்டிலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர் என சொல்லலாம். இந்த விக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் உதவியது. நாங்கள் சில விஷயங்களை செய்து பார்த்திருக்க வேண்டும். இளம் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள அணி எங்களுடையது. நிச்சயம் நாங்கள் பாடம் பெற்றுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை