UA-201587855-1 Tamil369news ‘19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி’ - தோல்விக்கு பிறகு ருதுராஜ்

‘19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி’ - தோல்விக்கு பிறகு ருதுராஜ்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 18-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு 2-வது தோல்வியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தது…

“இந்த ஆடுகளம் நிதானமானதாக இருந்தது. எதிரணி பவுலர்கள் முதல் இன்னிங்ஸின் பிற்பாதியில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அதன் காரணமாக எங்களால் ரன் சேர்க்க முடியவில்லை. இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் ரன் சேர்த்தோம். அதே நேரத்தில் நாங்கள் பந்து வீசிய போது பவர்பிளே ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்துவிட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்திருந்தோம். அதோடு ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை