UA-201587855-1 Tamil369news ‘போட்டியை முடித்துக் கொடுப்பதில் ஹெட்மயர் வல்லவர்’ - சஞ்சு சாம்சன் பெருமிதம்

‘போட்டியை முடித்துக் கொடுப்பதில் ஹெட்மயர் வல்லவர்’ - சஞ்சு சாம்சன் பெருமிதம்

முலான்பூர்: போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் ஷிம்ரன் ஹெட்மயர் வல்லவராகத் திகழ்கிறார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஜிதேஷ் சர்மா 29, லிவிங்ஸ்டன் 21, அசுதோஷ் சர்மா 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணியால் குறைவான ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை