UA-201587855-1 Tamil369news பி.வி.சிந்து வெற்றி முதல் மணிகா பத்ரா தோல்வி வரை | இந்தியா @ ஒலிம்பிக் 2024

பி.வி.சிந்து வெற்றி முதல் மணிகா பத்ரா தோல்வி வரை | இந்தியா @ ஒலிம்பிக் 2024

இறுதி சுற்றுக்கு முன்னேறி ஸ்வப்னில் சாதனை: துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. 44 பேர் கலந்து கொண்ட இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். இதில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 7-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்வப்னில் குசலே. அவர், மண்டியிட்ட நிலையில் 198 புள்ளிகள், படுத்த நிலையில் 197 புள்ளிகள், நின்ற நிலையில் 195 புள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 590 புள்ளிகளை குவித்தார். ஸ்வப்னில் குசாலே 2015 முதல் ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 589 புள்ளிகள் சேர்த்து 11-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். சீனாவின் லியு யுஹுன் (594) முதலிடத்தையும், நார்வேயின் ஜான் ஹெர்மான் ஹெக் (593) 2-வது இடத்தையும், உக்ரைனின் செர்ஹி குலிஷ் (592) 3-வது இடத்தையும் பிடித்து இறுதி சுற்றில் நுழைந்தனர். பிரான்ஸின் லூகாஸ் கிரிஸ் (592), செர்பியாவின் லாசர் கொவாசெவிக் (592), போலந்தின் டோமாஸ் பார்ட்னிக் (590), செக் குடியரசின் ஜிரி பிரிவ்ராட்ஸ்கி (590) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை