UA-201587855-1 Tamil369news “அம்பேத்கர் இல்லையென்றால் நான் இல்லை” - பா.ரஞ்சித் நெகிழ்ச்சி @ ‘தங்கலான்’ நிகழ்வு

“அம்பேத்கர் இல்லையென்றால் நான் இல்லை” - பா.ரஞ்சித் நெகிழ்ச்சி @ ‘தங்கலான்’ நிகழ்வு

சென்னை: “என்னுடைய அரசியல்தான் நான். அது இல்லை என்றால் நான் இல்லை. பாபாசாஹேப் அம்பேத்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இல்லையென்றால் நான் இங்கே இல்லவே இல்லை” என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “இந்த படம் ஆரம்பிக்கும்போது ஞானவேல் ராஜாவுக்கு இருந்த பிரச்சினை குறித்து நிறைய பேர் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் நான் அவருடன் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தை நான் நினைத்தபடி எடுக்க எந்த சமரசமும் இல்லாமல் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார். நான் கமர்ஷியல் படங்களை பார்த்து சினிமாவுக்குள் வரவில்லை. கல்லூரி காலங்களில் நான் பார்த்த உலக திரைப்படங்கள்தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை