தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க மறுத்த விவகாரத்தை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்திருந்த வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து நடிகை கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்தனர். இதனிடையே, கரோனா தொற்றுப் பிரச்சினையில் இஸ்லாமியர்களைக் குற்றம் சாட்டியும் ட்வீட் செய்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்