UA-201587855-1 Tamil369news எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள்: 60ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் சமமாகக் கவர்ந்தவர் 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள்: 60ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் சமமாகக் கவர்ந்தவர் 

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. அவர் இறந்துவிட்டாலும் இறவாப் புகழ்பெற்ற பல்லாயிரம் பாடல்களின் மூலம் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட சமூகத்துக்குப் பங்களித்தவர்கள் இறக்கும்போது அவர் மீது மரியாதை கொண்டவர்களால் உதிர்க்கப்படும் உணர்வும் உண்மையும் மிக்க வார்த்தைகள்தான் இவை. ஆனால், எஸ்பிபியைப் பொறுத்தவரை இந்த வார்த்தைகளுக்கு கூடுதல் அர்த்தமும் அதற்கு வலுவூட்டும் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.

எஸ்பிபி இன்று உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை அவருடைய பாடல்களைக் கேட்காமல் ஒரு நாள்கூட கழிவதில்லை என்று சமூக ஊடகங்களில் 2k கிட்ஸ் இளைஞர்கள் பகிர்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ், 70ஸ் கிட்ஸ் ஏன் சமூக ஊடகத்தில் இல்லவே இல்லாத 60ஸ் கிட்ஸ்க்கும்கூட இதே உணர்வுதான் இருக்கும். 1960களில் திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கிய எஸ்பிபி 2020வரை எல்லா வயது இசை ரசிகர்களையும் சமமாக வசீகரித்தார். ஒட்டுமொத்தக் கலைத் துறையில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தன் திறமையை நீண்ட காலத்துக்கு தக்கவைப்பதோடல்லாமல் கால மாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டதாலும்தான் அவரால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை ரசிகர்களின் இதயத் துடிப்பாக நிலைத்துவிட முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை