UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகள் தொடர் படிப்பினைகளை கொடுத்துள்ளது: இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து

மேற்கு இந்தியத் தீவுகள் தொடர் படிப்பினைகளை கொடுத்துள்ளது: இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து

லாடர்ஹில்: மேற்கு இந்தியத் தீவுகள் - இந்தியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 45 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களும், திலக் வா்மா 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் சேர்த்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, ஷுப்மன் கில் 9, சஞ்சு சாம்சன் 13, ஹர்திக் பாண்டியா 14, அக்சர் படேல் 13, அர்ஷ்தீப் சிங் 1, குல்தீப் யாதவ் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினர். யுவேந்திர சஹல் 0, முகேஷ் குமாா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் பந்துவீச்சில் ரொமேரியோ ஷெப்பர்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ராஸ்டன் சேஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை