UA-201587855-1 Tamil369news ஜெயிலர்: திரை விமர்சனம்

ஜெயிலர்: திரை விமர்சனம்

காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற முத்துவேல் என்கிற டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) குடும்பத்துடன் முதுமைப் பருவத்தை அமைதியாகக் கழிக்கிறார். முத்துவேலின் மகனும் காவல்துறை துணை ஆணையருமான அர்ஜுன் பாண்டியன் (வசந்த் ரவி), வர்மன் (விநாயகன்) என்னும் சிலை கடத்தல் மாஃபியாவை எதிர்க்கிறார். திடீரென்று அர்ஜுன் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. மகனின் மரணத்துக்குக் காரணமான வர்மன் குழுவைப் பழிவாங்கக் கிளம்புகிறார் முத்துவேல். அந்தக் குழுவில் ஒவ்வொருவராக அழித்து வர்மனை நெருங்கினால், அர்ஜுன் உயிரோடு இருப்பது தெரிகிறது.

ஆந்திராவில் ஆதி நாராயணர் கோயிலில் இருக்கும் பழங்கால வைரம் பதித்த கிரீடத்தைத் திருடிக் கொடுத்தால் அர்ஜுனை விடுவதாக முத்துவேலிடம் பேரம் பேசுகிறார் வர்மன். மகனுக்காக அதை ஏற்கும் முத்துவேல் பிறகு என்ன செய்கிறார்? அர்ஜுன் காப்பாற்றப்பட்டாரா? எனும் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை