UA-201587855-1 Tamil369news சையத் முஷ்தாக் அலி கோப்பை 2023 | சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப்

சையத் முஷ்தாக் அலி கோப்பை 2023 | சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப்

மொகாலி: நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பரோடோ அணியை 20 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இதன் மூலம் முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அன்மோல்பிரீத் சிங் விளாசிய சதம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.

சண்டிகரில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அன்மோல்பிரீத் சிங், 61 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். நேஹல் வதேரா, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை