UA-201587855-1 Tamil369news காந்தஹார் விமான கடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி

காந்தஹார் விமான கடத்தல் வெப் தொடரில் அரவிந்த்சாமி

கடந்த 1999-ம் ஆண்டு டிச. 24-ம் தேதி ‘ஐசி 814’ என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்குக் கிளம்பியது. 179 பயணிகள், 11 ஊழியர்கள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது.

200 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா தர வேண்டும். இந்தியச் சிறைகளிலிருக்கும் 36 தீவிரவாதிகளை நிபந்தனைகளின்றி விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தீவிரவாதிகள் வைத்தனர். அப்போதிருந்த வாஜ்பாய் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 3 முக்கிய தீவிரவாதிகளை விடுவித்து, விமானத்தை மீட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை